திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
8. அன்புடைமை (Compassion) குறள்கள்
71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்.
பொருள்: அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
English Version72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்: அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
English Version77
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
பொருள்: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
English Version