தமிழ் மழலைப் பாடல்கள்
தமிழ் மழலைப் பாடல்கள்
வானம் கறுத்தால் மழை பெய்யும்
மழை பெய்தால் மண் குளிரும்
மண் குளிர்ந்தால் புல் தழைக்கும்
புல் தழைத்தால் பசு மேயும்
பசு மேய்ந்தால் பால் சுரக்கும்
பால் சுரந்தால் கன்று குடிக்கும்
கன்று குடித்து மி்ஞ்சியதைக்
கறந்து கொண்டு வந்திடலாம்
கறந்து கொண்டு வந்ததை
காய்ச்சி நாமும் குடித்திடலாம்