பாரதியார் விருது

வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் தனித்துவமாகச் செயல்படும் ஆசிரியர்களுக்குபாரதியார் விருது2023 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. பாடத்திட்டம், இலக்கணம், போட்டிகள், தமிழ் மொழி, வரலாறு, இலக்கியம் சார்ந்த தனித்துவமான செயல்பாடுகள் மற்றும்  பள்ளியைச் சார்ந்த சில முக்கியமான முன்னெடுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்குபாரதியார் விருதுவழங்கப்படுகிறது.

பாரதியார் விருது – 2023

2023 ஆம் ஆண்டு பாரதியார் விருது பெற்ற ஆசிரியர்கள்

சங்கீதா இராமகிருஷ்ணன்தமிழ்த்தேனீ போட்டியில் நம் பள்ளி வெற்றிகள் பெற முன்னோடியாக இருந்தவர். தமிழ்த்தேனீப் போட்டியில் வள்ளலார் தமிழ்ப் பள்ளி வெற்றி பெற்றமைக்குக் காரணமாக இருந்தமையால் பாரதியார் விருதினை பெறுகிறார்.

ஶ்ரீமதி ஜெயராம்தமிழ் வாசிப்பு தமிழ்நாட்டிலேயே மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி மாணவர்களை தமிழ் வாசிப்பில் ஆர்வம் கொள்ள வலையொளி என்ற முயற்சியைத் தொடங்க காரணமாக இருந்தவர். தமிழ் வாசிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியமைக்காக பாரதியார் விருதினை பெறுகிறார்.

சரண்யா இராமலிங்கம்தமிழில் வாக்கியங்கள் எழுதுவதற்கு இலக்கணம் அவசியம். அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு எளிமையாக தமிழ் இலக்கணங்களைப் புரிய வைப்பது சவால் நிறைந்தது. இலக்கணங்களை மிகவும் எளிமையாக மாணவர்களுக்கு சரண்யா கற்றுத் தருகிறார். அவரது தனித்துவமான முயற்சிக்கு பாரதியார் விருது வழங்கப்படுகிறது.

நடராசன் வைரவன்வள்ளலார் தமிழ்ப் பள்ளியில் அர்பணிப்புடன் பணியற்றிதுடன் மட்டுமில்லாமல் தலையாலங்கானம் போன்ற தனித்துதுவமான வரலாறு சார்ந்த முயற்சிகளுக்காகவும் பாரதியார் விருது பெறுகிறார்.

விருது பெற்ற அனைவருக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்

பாரதியார் விருது – 2024

பாலாசி ஆற்காடு சீனிவாசன் : தொடக்க நிலை வகுப்புகளுக்குத் தொடர்ந்து ஆர்வத்துடன் ஆசிரியராகப் பணியாற்றுவது சவால் நிறைந்தது. மாணவர்களுடன் அன்பாகப் பழகி, அவர்களை ஆர்வமுடன் தமிழ் வகுப்புக்குக் கொண்டு வருவது ஒரு தனித்திறமையாகும். அதனைச் சிறப்பாக கடந்த பல வருடங்களாக செயல்படுத்தி பாரதியார் விருதினை பெறுகிறார்.

வெங்கடேஷ் கஜபதி : தமிழ் மொழி மட்டுமில்லாமல் நம் தமிழ்ப் பண்பாட்டினையும் மாணவர்களுக்குக் கொண்டு செல்வதை வள்ளலார் தமிழ்ப் பள்ளி முக்கியமாகக் கருதுகிறது. அந்த நோக்கத்தினை சிறப்பாக செய்வது மட்டுமில்லாமல் வள்ளலாரின் வழியை தன் செயல்பாடுகளால் ஆர்வமுடன் வெளிப்படுத்துவதால் பாரதியார் விருதினை பெறுகிறார்.

சண்முகம் மஞ்சமுத்து : மொழி கற்பித்தல் எப்பொழுதும் கடினமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மாணவர்களுடன் இனிமையாகப் பழகி, வகுப்பினை கலகலப்பாக வழிநடத்துதல் மாணவர்களை தமிழ்ப் பள்ளிக்கு ஈர்க்கும். அப்படியான இனியமான ஆசிரியராகவும், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும் பாரதியார் விருதினை பெறுகிறார்.

மதியரசி தெய்வநாயகம் : எட்டாம் வகுப்பு, பள்ளியின் இறுதி ஆண்டு என்றாலும், அந்த வகுப்பு மிகவும் சவால் நிறைந்ததாகவே உள்ளது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய எட்டாம் வகுப்பினை மிகவும் பொறுமையுடனும், அக்கறையுடனும், ஈடுபாட்டுடன் வழிநடத்துவதாலும், பள்ளி சார்ந்த பல கலைநிகழ்ச்சியில் கடந்த பல ஆண்டுகளாக தனித்துவமாகச் செயல்படுவதாலும் பாரதியார் விருதினை பெறுகிறார்.